???
உனக்கும் இல்லாமல் எனக்கும் இல்லாமல்
தொலைந்து போகின்றன பொழுதுகள்
வரைந்திருந்த வட்டத்துக்கு வாசல் வைத்தேன்
அகண்ட அகழிகள் காணாமற் போன பிறகு
அதிலிருந்த முதலைகளாய் ஞாபகங்கள் கொல்லும்
அரணிழந்து நிற்கின்றேன், தழும்புகள் நினைவுக் குறிப்பாய்.
அகழியைத் திரும்பத் தோண்டிக் கொண்டு
புரியாமல் குடிவர எத்தனிக்கும் அன்னங்களை விரட்டி
வாய்பிளக்கும் முதலைகளைக் குடியேற்ற
ஆவியாய்ச் சூடாகி மேலெழும் என்னுணர்வு
தொலைந்து போகின்றன பொழுதுகள்
வரைந்திருந்த வட்டத்துக்கு வாசல் வைத்தேன்
அகண்ட அகழிகள் காணாமற் போன பிறகு
அதிலிருந்த முதலைகளாய் ஞாபகங்கள் கொல்லும்
அரணிழந்து நிற்கின்றேன், தழும்புகள் நினைவுக் குறிப்பாய்.
அகழியைத் திரும்பத் தோண்டிக் கொண்டு
புரியாமல் குடிவர எத்தனிக்கும் அன்னங்களை விரட்டி
வாய்பிளக்கும் முதலைகளைக் குடியேற்ற
ஆவியாய்ச் சூடாகி மேலெழும் என்னுணர்வு
Labels: கவிதை