Friday, May 26, 2006

சூரியன்


மழையின் களியாட்டப் பொழுதொன்றில்
நிழல்களெல்லாம் வாலைச் சுருட்டிக் கொண்டு
ஒளிந்திருக்கும் அழகிய நேரத்தில்
என்னைத் தொலைப்பேன்.
ஓய்ந்து சிறிது நேரத்தில்
மரங்களின் கண்ணீருடன் விடைபெறும் மழையின்
கடமையுணர்த்தும் அழைப்புக் கேட்டு
மீண்டு வருவேன்
தொலைந்து போகும் இன்னொரு தருணம்
மீண்டும் வருமென்று.

Labels: