Tuesday, June 13, 2006

பேய்கள்

---சாம்பல் நிறத்திலிருப்பது விடுபட்டுப் போனதால் திரும்ப பதிவு செய்யப்படுகின்றது.

நடுநிலைவாதியருக்கும், சமாதானப் புறாக்களுக்கும் இது பிடிக்காமற் போகலாம் என்று ஒரு வலைப்பதிவர் சொன்னது போல ஆகலா
ம். ஏனையோரிற் சிலருக்கு கொடூரமாய்த் தெரியலாம். ஆனாலும், என் உணர்வுகள் இவையே. இப்படித் தவிர என்னால் "நல்லமாதிரி"ச் திந்திக்க முடியவில்லை. ஆத்திரமும் கையறு நிலையும் என்னைப் பதற/நடுங்க வைக்கின்றன.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

மனிதர்களல்ல. பேய்கள்.நாளை வருமா சாவு வருமாவென்று தெரியாத தளிர்களுக்குப், பொய்யாய்ப் பயம் தணிவிக்கும் எங்களுக்கு பேய்கள் நடமாட்டம் கண்ணுக்குத் தெரிகிறது. பேய்களுக்குக் காலில்லையாமே? யார் சொன்னது? கால்களுண்டு. சும்மா கால்களல்ல.. இரத்தம் தோய்ந்து, சதை ஒட்டித் தொங்கும் பூட்ஸ் கால்கள். வெள்ளை அணிவதில்லை. பச்சையும் மண்ணிறமும் கலந்த சீருடை. குத்திக்கிழித்து இரத்தம் சிந்த வைக்கக் குறிகளும் கத்திகளும்.

வீடுகளுக்குப் போங்கள் பிசாசுகளே.. உங்கள் தாய்மார்கள் சோற்றில் நஞ்சைக் கலந்து தரட்டும்.
துவைத்துத் தரும் ஆடைகளில்
சகோதரிகள் காஞ்சோன்றியைப் பூசட்டும்.
தலைக்கு எண்ணெய் வைத்து ஆசீர்வதிக்கும் பாட்டியர், அரைத்த மிளகாயைத் தேய்த்துவிட உங்கள் கண் பிரிக்கட்டும்.
உன் குடல்மாலையால் அலங்கரிக்கப்படவேண்டித் தன் எருமைகளை உங்கள் மீது பாட்டன்கள் செலுத்தட்டும்.
விழித்திருந்து அணுகும் தருணங்களில் பழுக்கக் காய்ச்சின கம்பிகளை உங்கள் ஆசன வாய்களிலும் குறிகளுக்குள்ளும் புகுத்திய பின் குறிகளை மனைவியர் இரத்தம் கொட்ட அறுத்துப் போடட்டும்.
தந்தையர் உங்கள் நகங்களையும் சகோதரன் தலை மயிரையும் பிய்த்தெறிந்து நீக்கட்டும்.
இரத்தம் படிந்த கைகளால் தட்டாமாலை சுற்றப்படுகின்ற உங்கள் குழந்தைகளும் எமது தளிர்களைப் போன்றே நீங்கள் தொட்ட மாத்திரத்திலேயே கருகிப் போகட்டும்.

போங்கள்.. போய்ச் செத்துத் துலையுங்கள். உங்கள் இறப்பில் தீபாவளிகள் இங்கே விடியட்டும்.

Labels: