Thursday, May 24, 2007

நாள்

வழி நெடுகலும்
வழிந்தோடும் வியர்வையின் வாசம்
குருதி வீச்சோடு
சேரும் நல்முகூர்த்தம் சொல்ல
மனித உருவில் யமன் வருவான்
அச்சப்பட்டாலும் எச்சமிட்டாலும்
பலன் ஒன்றுதான்
பல்லி பட்டால் பலன் சொல்லும் பஞ்சாங்கத்தில்
சன்னம் உடலில் பட்டால்
என்னவென்று எழுதவில்லை

முடிச்சவிழ்ந்து கட்டினதெல்லாம்
நடுத்தெருவில் சிதறும்
அவசரமாய்ப் பொறுக்குவதில்
சுதந்திரமோ
நிம்மதியோ இல்லை.
நீள்கின்ற தெருவும்
அதை விடவும் நீளமான இரவும்
கருமை படர்விக்கும்.
சாலையின் குண்டும் குழியும் போல மனது

Labels:

0 உங்கள் கருத்து:

Post a Comment

<< Home