கறை
அவலக்குரல் காதில் வாங்காமல்
நகர்ந்தோடும் காலம் உண்டு உமிழ்ந்து போகும்
வரலாற்றில் ஒரு துகளாய் நாம்
விழுகின்ற மழைக்கும் கழுவி(வி)ட முடிவதில்லை
சிந்தப்பட்ட எம் குருதியை.
குளங் கட்டி வைப்போம் குருதி சேர்ப்பதற்கு
தேவையானவர்கள் அள்ளித் தாகம் தீர்க்க
இனிமேலும், கேளாமல்
கொட்டுகின்ற சிவப்புத் திரவம்
அள்ளியெடு, சிலவேளை வந்த வழி திருப்பியனுப்பலாம்
இல்லையெனின், அவர்கள் வயலுக்கு எம் குளம் கொண்டு
ஏற்றமிறைக்கட்டும்,
சிவப்பரிசி நன்கு விளையும்.
வரலாற்றுத்துணி சரசரக்க இழுத்தெடு,
கால நீரோட்டத்தில் கறைகள் கழுவலாம்.
நகர்ந்தோடும் காலம் உண்டு உமிழ்ந்து போகும்
வரலாற்றில் ஒரு துகளாய் நாம்
விழுகின்ற மழைக்கும் கழுவி(வி)ட முடிவதில்லை
சிந்தப்பட்ட எம் குருதியை.
குளங் கட்டி வைப்போம் குருதி சேர்ப்பதற்கு
தேவையானவர்கள் அள்ளித் தாகம் தீர்க்க
இனிமேலும், கேளாமல்
கொட்டுகின்ற சிவப்புத் திரவம்
அள்ளியெடு, சிலவேளை வந்த வழி திருப்பியனுப்பலாம்
இல்லையெனின், அவர்கள் வயலுக்கு எம் குளம் கொண்டு
ஏற்றமிறைக்கட்டும்,
சிவப்பரிசி நன்கு விளையும்.
வரலாற்றுத்துணி சரசரக்க இழுத்தெடு,
கால நீரோட்டத்தில் கறைகள் கழுவலாம்.
Labels: கவிதை
0 à®à®à¯à®à®³à¯ à®à®°à¯à®¤à¯à®¤à¯:
Post a Comment
<< Home