உன்னையும் என்னையும் நினைத்து
அன்றொருமுறை கேட்டு
நீ முடியாதென்றதும் மறந்து விட எத்தனித்தும் முடியவில்லை
இன்றும் உன் நினைவுகள் வருகின்றன,
தவறென்றுசொல்லி தாலி தொட்டுப் பார்த்து
காற்றினைப் போல என்னுள் நிறைந்திருக்கும் உன்னை
வெளியேற்றி
மனவாசலடைத்து உள் திரும்ப
அரியாசனத்திலமர்ந்து முறுவலிக்கிறாய்,
வலியெப்போது போகும்?
நீ முடியாதென்றதும் மறந்து விட எத்தனித்தும் முடியவில்லை
இன்றும் உன் நினைவுகள் வருகின்றன,
தவறென்றுசொல்லி தாலி தொட்டுப் பார்த்து
காற்றினைப் போல என்னுள் நிறைந்திருக்கும் உன்னை
வெளியேற்றி
மனவாசலடைத்து உள் திரும்ப
அரியாசனத்திலமர்ந்து முறுவலிக்கிறாய்,
வலியெப்போது போகும்?
Labels: கவிதை