Friday, July 21, 2006

நான் பெண்

"சட்டை போடாமல் இருக்கக்கூடாது"வில் ஆரம்பித்து
"காலைச் சேர்த்து இரு" என்றும்
"பெடியங்களோடு என்ன கதை" என்றும்
இடிவாங்கியதற்குப் பழி கேட்டும்
விலை கொடுத்து வாங்கிய ஆணுக்கு விற்கப்படுகையிலும்
பதிலாயொன்றும் பெறாமல் அவனுக்கு இரையாகையிலும்
அதனடையாளமாய் மரணந் தொட்டு எச்சமிடுகையிலும்
இன்னுமின்னும் வேண்டாம் கூடாதுகள் கேட்கையிலும்
புதிது புதிதாய் சிறைகள் திறந்து கொள்ளும்.
பொறுக்கியாவானென்று தெரியாமலே
கிருஷ்ணனுக்கு
க் கதவுகள் திறந்தது போல்
கைதியெனக்குத் திறக்கக் கூடு
ம் ஒரு நாளில்
குளோன்கள் பல்லாயிரத்துடன் மகிழ்ச்சியாய் உயிர் துறப்பேன்.

Labels: