Tuesday, May 30, 2006

எண்ணங்கள்


கோழிக்குத் தூவின அரிசிகளாய்
சிதறிக்கிடக்கின்றன எனதெண்ணங்கள்.
பொறுக்கியெடுத்துக் கோர்க்க நினைத்தாலும்
பிரசவிக்கையில் மட்டுங்
காணக்கூடியதாய் - பின்
உருமாறிப் புறப்பட்டவைகளை
கோபத்தில் தெறித்த வார்த்தைகள் போல்
அள்ள முடியாதிருக்கிறது.

Labels:

6 உங்கள் கருத்து:

Blogger ரவி சொல்வது..

அருமை..

31 May, 2006 14:03  
Anonymous Anonymous சொல்வது..

பிளேடு போல இருக்கு

31 May, 2006 14:03  
Blogger ஜயராமன் சொல்வது..

நல்ல கவிதை படைத்த தங்களுக்கு நன்றி.

என் பதில் கவிதை இதோ!

உருமாறி திசைமாறி இவ்வெண்ணங்கள் என்னை உருமாற்றி விட்டன.

இவையிட்ட அடிகள் பட்டு என் மனம் சில சமயம் வானுயர பறக்கிறது;

வேறு சமயம், விஷ எண்ணங்கள் சேர்ந்து என்னை ஆழப்புதைக்க ஆயத்தம் இடுகின்றன.

நினைவலைகளில் மிதந்து நான் நிலையற்று தடுமாறி, ....

அகோ என் எண்ணங்காள்! என்னை ஆக்குவதும் நீங்களே அழிப்பதும் நீங்களே.

31 May, 2006 14:07  
Blogger முகில் சொல்வது..

நன்றி ரவி, ஸ்ரீநிதி, ஜயராமன்.

ஸ்ரீநிதி - உண்மையான கருத்துக்கு நன்றி. உங்கள் ரசனைக்கேற்ப என் படைப்பு இல்லாமைக்கு வருந்துகிறேன். :-(
(இந்த " ஸ்ரீ" எழுத்தை யுனிக்கோடில் எப்படி எடுக்கிறீர்கள்?)

31 May, 2006 14:35  
Blogger ஜயராமன் சொல்வது..

ஸ்ரீ டைப் பண்ணுவது ரொம்ப ஈஸி.

நான் உபயோகிப்பது tamil99 கீபோர்ட்.

இதில் ஷிப்ட்+Y அடித்தால் ஸ்ரீ வரும்.

tamil99 கீபோர்ட் ஒரு புரட்சிகரமான கீபோர்ட். இதை உபயோகித்து தமிழில் டைப் செய்வது ரொம்ப ஈஸி. இதில் விசேஷம் என்னவென்றால் இந்த மாதிரி வடமொழி எழுத்துக்களை தவிர எதுக்கும் ஷிப்ட் கீயை உபயோகிக்க வேண்டாம். இதனால் (பழகினபின்) ரொம்ப வேகமாக தமிழில் டைப் செய்யலாம்.

இந்த கீபோர்டை நிறைய பேர் தெரிந்துகொள்ளாமலும், உபயோகிக்காமலும் இருப்பது ரொம்ப துரதிர்ஷ்டமானது.

நன்றி

31 May, 2006 15:25  
Blogger முகில் சொல்வது..

நன்றி ஜயராமன்.

31 May, 2006 15:29  

Post a Comment

<< Home